இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 24 பேர் கைது

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 24 பேரும் தெமட்டகொட பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுடன் சம்பந்தபட்டவர்கள் என இலங்கை அரசு கூறியுள்ளது. இவர்களில் இருவர் மட்டும் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

Exit mobile version