கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : 21 பேர் பலி

கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் நைரோபியில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும் சிலரின் தற்கொலைப் படை தாக்குதலில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், பயங்கரவாதிகளுடன் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 14 பேர் உயிரிழந்ததனர். இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version