News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

2018 டாப்-10 வழக்குகள்

Web Team by Web Team
December 26, 2018
in Top10
Reading Time: 1 min read
0
2018 டாப்-10 வழக்குகள்
Share on FacebookShare on Twitter

காவிரி மேலாண்மை ஆணையம் 16.2.18

காவிரி நதி நீர் பங்கீட்டின் மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க கர்நாடக அரசிற்குஉத்தரவிட்டது. தமிழக அரசின் தொடர் சட்டப் போராட்டத்தால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது.

மரணம் அடிப்படை உரிமை 10.3.18

கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒருவர் கவுரவமாக உயிரிழப்பதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று தான் என்றும், உயிர் சாசனம் மற்றும் ‘பாசிவ் யூதனேசியா’’ எனப்படும் கருணைக் கொலை சட்டப்படி செல்லும் என்றும், குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டவர்கள் மற்றும் கோமா நிலைக்குச் சென்றுவிட்டவர்கள் கவுரவமாக தங்கள் உயிரை முடித்துக் கொள்வதும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழும் உரிமையில் அடங்கும் என கடந்த மார்ச் 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சமூக பஞ்சாயத்துகள் தலையிடத் தடை 28.3.18

மதம், சாதி ரீதியில் சீர்திருத்தத் திருமணம் செய்யும் வயது வந்த ஆடவர், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், அந்தத் திருமணத்தில் உறவினர்களோ அல்லது 3ஆவது தரப்பினரோ தலையிடவும், மிரட்டல் விடுக்கவும், துன்புறுத்தவும் முடியாது என நீதிமன்றம் கூறியது. இந்த விவகாரத்தில், சமூக பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத அமைப்புகள் தலையிடுவதற்கு தடை விதித்தது.

திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழலாம் 7.5.18

வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழும் உரிமை உள்ளது என்றும் திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் குற்றமாகக் கருத முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் கடந்த மே7ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல 7.9.18

ஓரினச் சேர்க்கை குற்றமாக கருதும் இந்திய தண்டணைச் சட்டத்தின் 377ஆவது பிரிவின் ஒரு பகுதியை செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்து தீர்ப்பு வழங்கியது. இந்த பிரிவு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் உள்ளது என்றும் அனைவரும் சமமாக வாழ்வது, கண்ணியத்துடன் வாழ்வது தொடர்பான உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகவும் கூறியது.

தகாதஉறவு குற்றமல்ல 27.9.18

யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் தகாத உறவை குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல என்பதோடு ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலுறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது என்றும் கூறியது. எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் அரசியல் சட்டத்தின் 497வது பிரிவு ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆதார் செல்லும் 27.9.18

மத்திய அரசின் மிக முக்கியமான ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசன சட்டப்படி செல்லும் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பளித்தது. வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி சிம் கார்டு, பள்ளி மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் ஆதார் கட்டாயமில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு, வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தீர்ப்பு வழங்கியது.

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி 28.9.18

மாதவிடாயைக் காரணம் காட்டி 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி மறுக்கப்படுவது அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியது. எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு 31.10.18

தீபாவளி நாளில் இரண்டு மணி நேரம் மட்டும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களிலும் தலா 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என பட்டாசு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காற்று மாசு, ஒலி மாசு அதிக அளவில் ஏற்படுத்தக்கூடிய, திடக்கழிவு பிரச்சினையுள்ள பட்டாசுகளை தடை செய்யவும், இணையதளங்கள் வாயிலாக பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

ரஃபேல்- முறைகேடு இல்லை 14.12.18

பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் 36 ரஃபேல் ரக அதிநவீனப் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இதில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Tags: 2018 Top 10 Cases2018 டாப்-10 வழக்குகள்newsjnewsjtamil
Previous Post

மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

Next Post

சென்னை மாதவரத்தில் வழிகாட்டி பலகைகளில் விளம்பரங்கள்-வாகன ஓட்டிகள் அவதி

Related Posts

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
Next Post
சென்னை மாதவரத்தில் வழிகாட்டி பலகைகளில் விளம்பரங்கள்-வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மாதவரத்தில் வழிகாட்டி பலகைகளில் விளம்பரங்கள்-வாகன ஓட்டிகள் அவதி

Discussion about this post

அண்மை செய்திகள்

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

March 23, 2023
நிதிநிலை அறிக்கையில், திமுக அரசின் தோல்வியை நிதி அமைச்சர் மூடி மறைத்துள்ளார் – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

நிதிநிலை அறிக்கையில், திமுக அரசின் தோல்வியை நிதி அமைச்சர் மூடி மறைத்துள்ளார் – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

March 23, 2023
இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”…அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்!

இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”…அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்!

March 23, 2023
இராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..!

இராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..!

March 23, 2023
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு..இந்தியாவிற்கு எத்தனாவது இடம்?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு..இந்தியாவிற்கு எத்தனாவது இடம்?

March 23, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version