சென்னை தனியார் பள்ளியில் 2,000 மாணவ மாணவிகள் 188 மணி நேரம் நடனமாடி சாதனை

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், கின்னஸ் சாதனை முயற்சியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 188 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்தனர்.

சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிக்குலேசன் பள்ளியில் சோலோ நடன மாராத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 23ம் தேதி துவங்கிய இந்த சோலோ நடனம் தொடர்ந்து இரவு பகலாக இடைவேளையின்றி நடத்தபட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 188 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்தனர். இது கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அழகேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Exit mobile version