சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 2 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
ஒடிசா மாநிலம் சில்லிவடா பகுதியைச் சேர்ந்த ராம்சிங்,லீலாவதி தம்பதியினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். இவர்களது 2 வயது ஆண் குழந்தையான சோம்நாத்தை ஞாயிறு இரவு மர்ம நபர் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினரிடம் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இளைஞர் ஒருவர் சிவப்பு நிற பையோடு குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. அதனை வைத்து ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்