2வது சீசன் – தயார் நிலையில் தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன், ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் சீசன், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கவுள்ளது. சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். எனவே, அவர்களை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளன.

Exit mobile version