2ம் கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல் – அக்டோபர் 11ம் தேதி நடைபெறுகிறது

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இரண்டாம் கட்டத்தில் 113 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்பட 197 சங்கங்களின் 2 ஆயிரத்து 448 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வற்றில் 682 இடங்கள் பெண்களுக்கும், 438 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி, 8ம் தேதி வரை நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் 9 ஆம் தேதி வெளியிடப்படும். போட்டி இருப்பின் 11 ஆம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் 12ம் தேதியும் நடைபெறும்.

அக்டோபர் 16 ஆம் தேதி சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள சங்கங்களின் பெயர், விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version