பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியீடு!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வின் முடிவுகள் வருகிற மே 19 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறையானது செய்தி வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பிற்கான முடிவுகளானது வெள்ளிக்கிழமை( மே19) காலை 10 மணிக்கும், பதினொன்றாம் வகுப்பிற்கான முடிவுகள் அதே நாள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படுகிறது. மேலும் இந்த வெளியிடுகளானது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலம் மூலம் வெளியிடப்படுகிறது.  இந்த முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய வலைதளங்கள் மூலம் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Exit mobile version