கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

கேரள மாநிலத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

குழந்தையின் பெற்றோர், உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் குழந்தையின் பெற்றோருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தகவலை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version