சென்னையில் 14 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 14 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கார்த்திக், லோகநாதன், ராஜன், மணிகண்டன், கணேஷ்குமார் உட்பட 14 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version