புயலில் சேதமடைந்த 136 அரசுப் பள்ளிகள் விரைவில் சீரமைக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

கஜா புயல் காரணமாக நாகப்பட்டினத்தில் பாதிக்கப்பட்டுள்ள 136 அரசுப் பள்ளிகள் விரைந்து சீரமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. தமிழக அரசின் முதன்மை செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலருமான பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை 
அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டனர். சங்க இலக்கியத்தில் விலங்கியல் என்ற நூலை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

இதனைதொடர்ந்து, நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்த அவர், கஜா புயலுக்காக தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துக் கட்சியினரும் பாராட்டு தெரிவித்து வருவதை சுட்டிக் காட்டினார். புயலால் சேதமடைந்த பள்ளிகள் விரைந்து சீரமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

Exit mobile version