எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகவுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கை கடற்படை, மீனவர்கள் 4 பேர் மற்றும் ஒரு படகையும் சிறைபிடித்து சென்றனர்.

இதேபோல், நேற்று இரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மண்டபம் மற்றும் ஜெகத்தாப்பட்டினத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், சிறைபிடிக்கப்பட்ட 13 மீனவர்களை காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

Exit mobile version