12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: பார்வையற்ற மாணவர் பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பார்வையற்ற மாணவர் அபிஷேக் ஆண்டனி, 474 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதன்மை மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார். இரு கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அபிஷேக் ஆண்டனி முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக அவரது தாயார் எப்சிபா கூறினார்.

தனது படிப்புக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்ததாகவும், உதவி தொகை மற்றும் உபகரணங்கள் அனைத்தும் அரசு இலவசமாக வழங்கியதாகவும் அபிஷேக் ஆண்டனி கூறினார்.

Exit mobile version