நாளைத் தொடங்குகிறது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழகம் முழுவதும் நாளை பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுதேர்வானது தொடங்க உள்ளது. நாளை மறுநாள் (14.03.2023) பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் இது வாழ்வின் முக்கியமான கட்டம்.  இந்தத் தேர்வினை சரிவர கையாண்டு அனைவரும் வெற்றி வாகை சூடும் வண்ணம் பதட்டங்கள் இல்லாமல் எழுத வேண்டும். இந்தத் தேர்வுதான் அவர்களின் எதிர்கால படிப்பு என்னவாக இருக்கவேண்டும் என்பதினை முடிவு செய்யும் தேர்வு. பன்னிரெண்டாம் வகுப்பினை சேர்ந்த 8.5 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுத ஆயத்தமாகி உள்ளனர்.  மேலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் 7.8 லட்சம் பேர் இதனை எழுத உள்ளார்கள்.

Exit mobile version