பொதுத் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து!

இன்றைக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளை பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாணவ மாணவியர்கள் எந்தவித பயமும் பதட்டமும் இன்றி சிறப்பாக தேர்வினை எழுத வேண்டும் என்றும், பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தனது வாழ்த்தினைத் தெரிவித்தார். அவரது வாழ்த்தின் மையச்சரடு பின்வருமாறு உள்ளது. தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் அன்பிற்கினிய மாணவ,மாணவிகள், நம்பிக்கையுடனும்-சிரத்தையுடனும் , அச்சமில்லாமலும் தேர்வை எதிர் கொண்டு , அனைவரும் வெற்றி பெற்று உங்கள் எதிர்காலம் செழிப்புற உளமாற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்தியிருக்கிறார்.

Exit mobile version