10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் உச்சம்தொட வாழ்த்துகள் – அதிமுக பொதுச்செயலாளர்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டில் வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்தவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும், தங்கள் எதிர்காலம் சிறந்து புதிய உச்சங்களை தொட வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். முதல் முயற்சியில் பெறுவது மட்டுமே வெற்றியல்ல என்றும், ஒருவேளை வெற்றியை தவற விட்டிருந்தாலும் தங்கள் விடா முயற்சியால் தேர்விலும், வாழ்விலும் புதிய வெற்றிகளை பெற்று வருங்காலம் சிறக்க வாழ்த்துவதாக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version