100 தொகுதிகளில் போட்டி – ஆம் ஆத்மி வியூகம்

2019 ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. டெல்லியில் ஆட்சியில் உள்ள கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகு உள்ளது. இதில் 25 தொகுதிகளை கைப்பற்றுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி வலிமையாக உள்ளது. உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் இன்னும் சில மாநிலங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. அக்கட்சி. விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஷ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும் வேட்பாளர்களை அதிக அளவில் நிறுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version