சென்னை அருகே 10 லட்சம் ரூபாய் கேட்டு பெண் கடத்தல்

சென்னை அருகே 10 லட்சம் ரூபாய் கேட்டு, பெண்னை காரில் கடத்தி சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த திலகவேணி, அதே பகுதியைச் சேர்ந்த சகாய ராணியிடம் வீட்டு மனையைப் பெற்றுக்கொண்டு 10 லட்சம் ரூபாய் தொகையை பாக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட சகாயராணி கூறியதாக, திலகவேணியை 4 பேர் காரில் கடத்தியுள்ளனர். காரில் இருந்த மர்ம நபர்கள் திலகவேணியின் வாயை துணியால் கட்டி விஜிபி அருகே உள்ள அறையில் பணத்தை திருப்பித் தரக்கோரி, சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயங்களுடன் உயிர்தப்பிய திலகவேணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த விவகாரத்தில் திலகவேணியை காரில் கடத்திய தாஸ் மற்றும் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். சகாயராணியிடமும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Exit mobile version