விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்யா வழங்கிய விருது!

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ரஷ்ய அரசு “நட்புறவு விருது” வழங்கி கவுரவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில், விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தென்னிந்தியாவுக்கான ரஷ்யா துணைத்தூதர் செர்கெய் கோடோவ் “நட்புறவு விருதினை “ விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்கி கவுரவித்தார். ரஷ்ய பெண் ஓவியர் கட்யா பெல்யாவ்ஸ்கயா செஸ் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு வரைந்த ஓவியங்கள் இந்த நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

Exit mobile version