தமிழக அரசுக்கு விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு

விளையாட்டுத்துறையில் அதிக கவனம் செலுத்திவரும் தமிழக அரசுக்கு முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், விளையாட்டு சங்கங்கள் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், தமிழக அரசுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் விளையாட்டு வீரர்கள் தங்கள் துறையில் அதிக கவனம் செலுத்த வழிவகை செய்துள்ளது என்றார். மேலும், உலக அளவிலான செஸ் போட்டியில் தாம் பங்கேற்றபோது அரசு சார்பில் தமக்கு கிடைத்த உதவிகளை மறக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

Exit mobile version