விபத்துகளில் உயிரிழந்தவர்கள் 10-பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் – முதலமைச்சர் எடப்பாடி

தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ஆம் தேதி, காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேர் உயிரிழந்ததை அறிக்கை ஒன்றில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 19-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பேருந்து ஓட்டுநர், பயணி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இருவேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version