வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 71 %

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்டு 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தநிலையில், மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரி செலுத்துவது குறித்த தெளிவான விளக்கம், காலதாமத்திற்கு அபராத கட்டணம் ஆகியவை தொடர்பாக வருமான வரி தாக்கல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 71 விழுக்காடு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 கோடியே 42 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது.

Exit mobile version