வடகிழக்கு பருவமழை 26-ம் தேதிக்குப் பிறகு தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 26-ம் தேதிக்குப் பிறகு தொடங்க வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 22-ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பருவமழை தொடங்குவதற்கான சூழல் தள்ளிப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், வடகிழக்குப் பருவமழை 26-ம் தேதிக்குப் பிறகு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அநேக இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version