லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு இன்றைக்குள் லோக் ஆயுக்தா மசோதாவை அமுல்படுத்தக்கோரிய வழக்கை ஜூலை 10-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, தமிழக சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட லோக் ஆயுக்தா மசோதாவின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  

Exit mobile version