லட்சக்கணக்கான தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர்.

நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்தனர். பேருந்துகள், வேன்கள், கார்கள் மூலம் வந்த அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அவர்கள் மரியாதை செலுத்தினர். லட்சக் கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மெரினா கடற்கரை விழாக் கோலம் பூண்டிருந்தது.

Exit mobile version