மோசஸ் மற்றும் நபிகள் நாயகத்துடன் ரஜினியை ஒப்பிட்டு பேச்சு – சீமான் மீது புகார்

இறைத்தூதர்களாக கருதப்படும் மோசஸ் மற்றும் நபிகள் நாயகத்துடன் ரஜினியை ஒப்பிட்டு பேசியதாக சீமான் மீது, சென்னையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை காந்தி மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வெளிநாடுகளில் நடிகர் ரஜினி நிர்வாகிகளை நியமிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, இறைத்தூதர்களாக கருதப்படும் மோசஸ் மற்றும் நபிகள் நாயகம் ஆகியோரை நடிகர் ரஜினியுடன் ஒப்பிட்டு சீமான் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதத்தில் சீமான் பேசியதாக,தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் மற்றும் கிறிஸ்தவ மக்கள் கட்சி நிர்வாகிகள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version