மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூருக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால், அணையில் இருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.11 அடியாக இருந்த நிலையில், தற்போது 120.18 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், நீர் மேட்டூர் அணையில் நீர் இருப்பு 93.75 டி.எம்.சி.யாக உள்ளது. இதனிடையே, ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க, 57வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version