மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா அணைகளில் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. எனவே, அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 19 ஆயிரத்து 800 கனஅடியில் இருந்து 20 ஆயிரத்து 800 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 20 ஆயிரம் கனஅடியும், மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 120 புள்ளி 1 ஒன்பது அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி ஏழு 7 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

Exit mobile version