மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் மழையளவு குறைந்ததையடுத்து, அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், கடந்த வாரம் குறைப்பட்டது. இந்தநிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த 25ஆம் தேதி முதல் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடகா அதிகரித்துள்ளது. அதன்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியில் இருந்து 28 ஆயிரம் கனஅடியாக தற்போது அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 25 ஆயிரத்து 800 கனஅடியில் இருந்து, 27 ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 புள்ளி பூஜ்யம் 4 அடியாகவும், நீர்இருப்பு 93 புள்ளி ஐந்து 3 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version