மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

எதிர்க்கட்சித் தலைவருக்கு உரியப் பொறுப்பை உணராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க ஸ்டாலின் செயல்படுவதாக, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்ற விரக்தியில், உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகத் தெரிவித்தார்.

சிறப்பாகச் செயல்பட்டு வரும் அதிமுக அரசு மீது, களங்கத்தைச் சுமத்த நினைக்கும் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, புகார்களுக்கான ஆதாரங்களைக் காட்ட முடியுமா என மு.க ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.

Exit mobile version