முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் – பா.வளர்மதி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவார்கள் என்று, முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதி உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவர் வாழ்த்துரை வழங்கினார்.

ஆறு மாத குழந்தையாக இருந்தபோது வளர்மதி என தனக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியதை அவர் நினைவு கூர்ந்தார். எம்.ஜிஆர் கட்சியை தொடங்கும் போது அண்ணாவின் பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சி தொடங்கியதை வளர்மதி சுட்டிக் காட்டினார்.

எம்ஜிஆரின் சீரிய தலைமையில் அதிமுக வெற்றி மேல் வெற்றிகளை குவித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

1984ம் ஆண்டு சட்டப்பேரவையில் தான் உரையாற்றியதை குறிப்பிட்ட வளர்மதி, பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு மின் இணைப்பு கொடுப்பது தொடர்பாக தான் வைத்த கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தவர் எம்ஜிஆர் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஜெயலலிதா வழங்கிச் சென்ற ஆட்சியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக வழி நடத்தி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

இருவரும் இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பற்றுவார்கள் என்றும் வளர்மதி நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version