மத்திய அரசு மீது முன்னாள் பிரதமர் சாடல்

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபில் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மன்மோகன் சிங், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடைமுறையில் மத்திய அரசு பெரும் தோல்வியை சந்தித்து இருப்பதாக கூறினார். இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் தொழில் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றார். விவசாயிகள் பிரச்னை, பொருளாதார பாதிப்பு, அண்டை நாடுகளுடன் நட்புறவில் பிரதமர் மோடி அரசு தோல்வியடைந்து விட்டதாக மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார். மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

Exit mobile version