போகப்போக ஆட்டம் சூடுபிடிக்கும் – ராகுல் காந்தி

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்களிடம் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அந்த கூட்டத்தை தொண்டர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பிரதமர் மோடி ஊழலை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு வந்தார். இப்போது அவரே 30 ஆயிரம் கோடியை எடுத்து அம்பானிக்கு கொடுத்துள்ளார். வேடிக்கை இப்போதுதான் தொடங்கியுள்ளது. விஷயங்கள் மேலும் சுவாரஸ்யமாகும் என்று ராகுல் பேசியுள்ளார்.

விஜய் மல்லையா, லலித்மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. ஆகிய விவகாரங்களிலும் வேடிக்கை காட்ட போவதாக அவர் கூறியுள்ளார்.பிரதமர் மோடி பாதுகாவலர் கிடையாது, அவர் கொள்ளையர் என்பதை வெளி உலகிற்கு காட்டப்போவதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version