“நாங்க சரக்கு வித்தா உனக்கென்ன…..?” திமுக பிரமுகரின் ரத்த வெறியாட்டம்! தொடரும் அராஜகம்!

கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை என விடியா திமுக ஆட்சியில் மதுவால் பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வரும் நிலையில்தான் மற்றொரு கொடூரமும் அரங்கேறி இருக்கிறது. சட்ட விரோத மதுவிற்பனையை கண்டித்த அதிமுக உறுப்பினரை திமுக பிரமுகரும் அவரது சகோதரரும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்திருக்கின்றனர்.

விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இப்படி சிரித்தபடி காட்சியளிக்கும் இந்த திமுக பிரமுகர் தான் தனது அண்ணனுடன் சேர்ந்து கொடூர கொலை செய்திருக்கிறார். சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் இந்த திமுக பிரமுகரும் அவரது அண்ணனும் சேர்ந்துதான் ரத்த வெறியாட்டம் ஆடி இருக்கின்றனர்.

கோவை மாவட்டம் மாதம்பட்டி அடுத்த கரடிமடை பகுதியைச் சேர்ந்த கோகுல் தென்கரை பேரூராட்சியில் திமுக இளைஞரணி செயலாளராக பணிபுரிகிறார். இவரும் இவரது சகோதரர் ராகுலும் சேர்ந்து காளம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகின்றனர். கூடவே தங்கள் கரடிமடை பகுதியிலும் மதுபாட்டில்களை 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த சட்ட விரோத மது விற்பனையை தட்டிக் கேட்டுக் கண்டித்த அதிமுக உறுப்பினர் செல்வராஜைத்தான் திமுக பிரமுகர் கோகுலும் அவரது சகோதரர் ராகுலும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்திருக்கின்றனர்.

கோகுலும் ராகுலும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நிலையில் அங்கே சென்ற அதிமுக உறுப்பினர் செல்வராஜ், நீங்கள் பார் எடுத்து நடத்துகிறீர்கள்… ஆனால் 24 மணி நேரமும் இப்படி சட்ட விரோதமாகவும் மது விற்பனை செய்கிறீர்களே…. இதனால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்து தவிக்கின்றன என்று கூறி கண்டித்திருக்கிறார். இதனால் செல்வராஜுக்கும் கோகுல், ராகுலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்தே கொடூர கொலை சம்பவம் நடந்திருக்கிறது.

செல்வராஜை பின் தொடர்ந்து சென்ற திமுக பிரமுகர் கோகுலும் அவரது சகோதரர் ராகுலும் அவரை சரமாரியாக தாக்கி அருகில் உள்ள தோட்டத்திற்கு தரதரவென இழுத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே செல்வராஜின் கழுத்திலேயே எட்டி எட்டி உதைத்திருக்கின்றனர். இதில் மூச்சுத் திணறி ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்வராஜை அங்கிருந்த பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதோடு தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்திருக்கின்றனர். தகவலறிந்து வந்த அவரது குடும்பத்தினர் செல்வராஜின் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர்.

கூலித் தொழிலாளியாக இருந்து வந்த செல்வராஜிக்கு மனைவி, இரண்டு மகள்கள், மகன் இருக்கின்றனர். திமுக பிரமுகரும் அவரது சகோதரரும் சேர்ந்து கொடூரமாக தாக்கி செல்வராஜை கொலை செய்துவிட அவரது குடும்பத்தினர் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

கொலை செய்துவிட்டு தப்பியோடிய திமுக பிரமுகர் கோகுலையும் ராகுலையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். ஆனாலும் இந்தக் கொலையில் மேலும் நான்கு பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்வராஜின் மகள்கள் கோரிக்கை வைக்கின்றனர். செல்வராஜை போலவே மேலும் நான்கு பேரை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே காவல்துறையினரோ கொலையாளிகளான திமுக பிரமுகர் கோகுலுக்கும் அவரது சகோதரர் ராகுலுக்கும் ஆதரவாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் உயிர்களை பறிகொடுத்த குடும்பங்களின் கதறல்கள் இன்னமும் அடங்கவில்லை. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட திமுக பிரமுகரும் அவரது சகோதரரும் அதிமுக உறுப்பினரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Exit mobile version