பொதுக்கட்டிடங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் -காவல்துறை

குற்றங்களை கட்டுப்படுத்தவும் பொது அமைதியை பேணுவதற்காகவும் சென்னையில் உள்ள பொதுக்கட்டிடங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நகர, பெருநகர சட்டவிதி 2012-ன் படி சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயமாகிறது என்றும் சிசிடிவி கேமரா பொருத்த தவறும் பட்சத்தில் வியாபார உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version