பேருந்து கவிழ்ந்து விபத்து – 40 பேர் பலி

ஜெகதாலா பகுதியில் உள்ள மலைப்பாதையில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலை உச்சியில் இருந்து உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர், படுகாயங்களுடன் தவித்துக்கொண்டிருந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 30 சடலங்கள் மீட்கப்பட்டன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version