பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுப்பு – காதல் ஜோடி தற்கொலை

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த தங்கவேலும், நாமக்கல் வெப்படை பகுதியைச் சேர்ந்த மைனாவதியை 4 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வேறு சமூகம் என்பதால், பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், சேலம் ஊமகவுண்டம்பட்டியில் உள்ள சகோதரி வீட்டுக்குச் சென்ற காதல் ஜோடி, அப்பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது.

காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version