பெட்ரோல், டீசல் விலையை குறைங்க ப்ளீஸ் – அமைச்சர் ஜெயகுமார்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

கப்பலோட்டிய தமிழர் வ. உ சிதம்பரனாரின் 147 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், ஆசிரியர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். பண்புகள், நல்ல நெறிமுறைகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, நல்ல மனிதர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது என்று அவர் கூறினார்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version