பெட்ரோலுக்கு காசு கேட்பாயா? – ஊழியர் மீது திமுக பிரமுகர் பாக்சிங் தாக்குதல்

 

விழுப்புரத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஓசி பிரியாணிக்காக கடை உரிமையாளர் மீது பாக்சிங் தாக்குதல், அழகு நிலையத்தில் பெண்ணை அடித்து உதைத்தது, பஜ்ஜி கடையில் தாக்குதல் என திமுகவினரின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் திமுகவினர் கைவரிசையை காட்டி உள்ளனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் திமுக பிரமுகரான கவி. மோசஸ் என்பவர், தனது நண்பருடன் சென்று இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பினார்.

இதற்கு பணம் கேட்ட ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, இருவரும் அதிரடியாக தாக்குதலிலும் ஈடுபட்டனர். இந்த அராஜகத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் முகம்சுழித்து சென்றனர்.

திமுக பிரமுகரின் இந்த தாக்குதல் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Exit mobile version