திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் – பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது திமுகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில், பலர் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கட்சி மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் மற்றும் அவரது அடியாட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகாத வார்த்தைகளால் வசைபாடிய திமுகவினர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

இதில் படுகாயம் அடைந்த கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திமுகவினர் நடத்திய இந்தத் தாக்குதல் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version