புலிகளை கண்காணிக்க 455 கேமராக்கள்-வனத்துறை

சத்தியமங்கலம் பகுதியில், 455 கேமராக்களை வைத்து புலிகளின் நடமாட்டத்தை, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள்,மற்றும் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன.
இதையடுத்து அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி ஆகிய மூன்று வனப்பகுதிகளில், புலிகள் மற்றும் , சிறுத்தைகளின் நடமாட்டத்தை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மூன்று வனச்சரகத்திலும் 455 தானியங்கி கேமராக்கள் பொறுத்தப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில், அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் தாமரைகரை, மணியாச்சி அருகே உள்ள போலி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கி கேமராக்களில் புலிகளும், சிறுத்தைகளும் நடமாடுவது பதிவாகியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், ஆறு சிறுத்தைகள், பத்து புலிகள் நடமாட்டம் கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதுமட்டுமின்றி, மான், கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகளும் கேமராக்களில் பதிவாகி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version