பிரான்ஸ் தாக்குதல் பின்னணியில் ஐ.எஸ்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அரேபிய மொழியில் கூச்சலிட்டவாறு மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார். தன்னிடம் இருந்த கத்தியால் குத்தியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தாக்குதலில் படுகாயமடைந்த ஓருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். வீட்டிற்குள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய நபர் வெளியே வந்த போது அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாரீசில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version