பாவம், கண்ணி வெடியில் சிக்கிய காளை மாடு

மதுரை அருகே மர்ம நபர்கள் வைத்த கண்ணி வெடியில் காளை மாடு படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், செம்மினிப்பட்டியருகே காட்டுப்பன்றியைப் பிடிக்க மர்ம நபர்கள் சிலர், கன்னிவெடி வைத்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், மேய்ச்சலுக்குச் சென்ற அழகர்கோவில் காளை, மர்ம நபர்கள் வைத்திருந்த கண்ணி வெடியைக் கடித்து தின்றது. அப்போது, எதிர்பாராதவிதமாகக் கண்ணி வெடி, வெடித்துச் சிதறியதில், அதன் தாடை சிதைந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் அளித்ததின் பேரில், சிகிச்சைக்குக் காளை கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்க முடியாத நிலையில் காளை, திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவித்தனர்.

மேலும், கண்ணி வெடி வைத்த நபர்களை போலீசார் கைது செய்து, இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் பாதுகாக்க வேண்டும் என போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version