பாதுகாப்புத் துறை அமைச்சரை கொல்ல சதி – 2 பேர் கைது

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை கொல்ல சதி செய்த இருவரை, உத்தரகண்ட் மாநிலத்தில் போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, உத்தரகண்ட் மாநிலம் பித்ரோகர் மாவட்டத்தில், ராணுவம் சார்பில் நடத்தப்படும், மருத்துவ முகாமை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை கொல்வதற்கு சசித் திட்டம் இருப்பதாக ‘வாட்ஸ் ஆப்’ மூலம் தகவல் பரவுவதாக உத்தரகண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், 2 பேர் கைது செய்யப்பட்டனர். மதுபோதையில் இருந்த அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பயங்கரவாத தொடர்பு உள்ளதா, ஆயுதங்கள், வெடி பொருட்கள் வைத்துள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் குரூப்பின் அட்மினை கண்காணித்து வருவதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version