பாக்.கிடம் சிக்கி சின்னாபின்னமான ஹாங்காங்!

 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் இன்று நடைபெற்ற ஏ பிரிவு போட்டியில், முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானுடன், கத்துக்குட்டியான ஹாங்காங் மோதியது.

டாஸ் வென்ற  ஹாங்காங் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தானின் ஆவேசத்தால் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர் ஹாங்காங் வீரர்கள். கின்ஷித் ஷா, அய்சாஸ் கான் ஆகியோர் மட்டுமே சிறிது நேரம் தண்ணி காட்டினர்.

அய்சாஸ் 27 ரன்னிலும், கின்ஷித் 26 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். 37. 1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த ஹாங்காங், 116 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால் எளிய இலக்குடன் உற்சாகமாக களத்தில் உள்ளது பாகிஸ்தான்.

Exit mobile version