பழனி கோயிலில் 2 நீதிபதிகள் கொண்ட குழு ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர், தலைமை குற்றவியல் நீதிபதி நம்பி பழனி ஆகியோர் தலைமையில் தண்டாயுதபாணி கோயிலில் ஆய்வு நடத்தப்பட்டது. கோயிலில் தாயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் வைக்கப்பட்டுள்ள கிடங்கு, பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் விரைவில் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

Exit mobile version