பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது

கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ராஜ ராஜேஷ்வரி நகரில் மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய நவீன்குமார் மற்றும் சுதித்குமார் உள்ளிட்ட 6 பேரை சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வந்த நிலையில், கடந்த ஞாயிறன்று அமித் மற்றும் கணேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டநிலையில், தற்போது ராஜேஷ் என்பவரை சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version