பண்பாடு இல்லாமல் பேசுகிறார் ஸ்டாலின் – அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

பதவி ஆசையில் பண்பாடு இல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கணினி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பதவி வெறியில் அதிமுக அரசு குறித்து பண்பாடு இல்லாமல் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். எந்த சூழ்நிலையிலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை என குறிப்பிட்ட அவர், சந்தர்ப்பவாதி யார் என்று மக்களுக்கு தெரியும் என்றார்.

வழிப்போக்கன் தன்னை ஹீரோ என்று கூறுவது போல உள்ளது தினகரனின் நாடாளுமன்ற தேர்தல் நம்பிக்கை என்றும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

Exit mobile version