நோட்டாவை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சைலேஷ் மனுபாய் பரமர் என்பவர் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நோட்டா நேரடித் தேர்தலில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தது. மேலும், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.

 

    

Exit mobile version