4 நாட்களில் முடித்துவைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் 1,800 வழக்குகள்! தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவிப்பு!

uu lalit supremecourt

கடந்த 4 நாட்களில் மட்டும் உச்சநீதிமன்றத்தால் 1,800-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி யூ.யூ.லலித் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், பார் கவுன்சில் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் இதனை தெரிவித்தார். முடிந்த வரை உச்சநீதிமன்றத்தின் முன் வரும் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தனது பதவிக்காலம் முடியும் மூன்று மாதங்களுக்குள் தேங்கிக்கிடக்கும் அதிக அளவிலான வழக்குகளை முடித்து வைக்க முயற்சி செய்யவுள்ளதாக கூறினார்.

Exit mobile version